நீதிமன்ற வளாகத்திலேயே திருடுபோன வழக்கறிஞரின் சொகுசு கார்

புதன், 16 நவம்பர் 2016 (15:30 IST)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தனது விலையுயர்ந்த சொகுசு காரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அலுவல்களை கவனிக்கு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

திரும்பிவந்து பார்த்தபோது வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரின் சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்