இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் என ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் வந்தவண்னம் உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னனியில் உள்ள தொகுதிகளில், 40 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக, அதிமுக இடையே இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த இழுபறியே வெற்றியே தீர்மாணிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக வெற்றி பெறுவது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.