விபத்தில் முடித்த அதிமுக கொண்டாட்டம்

வியாழன், 16 பிப்ரவரி 2017 (21:06 IST)
எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பதை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.


 

 
எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டதை  அதிமுகவினர் மதுரை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது பட்டாசு வெடித்து எதிர்பாரத விதமாக அருகில் உள்ள கடைகளில் சிதறியது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
 
தீயணைப்பு படையினர் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் இரண்டு கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் 15 இருசக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்