பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சீனியர் செய்தி தொகுப்பாளர்கள், பிரபலங்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் சீனியர் செய்தி தொகுப்பாளர்களாக பணிபுரியும் ஷாசியா நிசார் மற்றும் ஆதர்ஷ் ஜா ஆகிய இருவரும் பிரபலங்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாகவும், பணம் கொடுக்காதவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு செய்திகளை டிவிகளில் பதிவு செய்வோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இவர்கள் இருவரும் சேர்ந்து 65 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் இவர்களது வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷாசியா நிசார் மற்றும் ஆதர்ஷ் ஜா இருவரும் சேர்ந்து பல பிரமுகர்களை மிரட்டியதாகவும், பணம் கொடுக்காதவர்கள் மீது பாலியல் தொல்லை குறித்த பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததாகவும் கூறப்படுவது பத்திரிகை துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.