தனியார் பைக் டாக்சியில் சென்ற இளம்பெண் பரிதாப பலி: சென்னையில் பெரும் சோகம்..!

ஞாயிறு, 7 மே 2023 (10:46 IST)
தனியார் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண் ஒருவர் கீழே விழுந்து பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை சேர்ந்த சேவிகா என்ற 39 வயது இளம் பெண் தனது பிறந்தநாளை ஒட்டி உறவினர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக தனியார் பைக் டாக்ஸியில் சென்றார். அப்போது அவர் சென்ற பைக் டாக்சி திடீரென லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் கீழே விழுந்த சேவிகா படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டுநர் காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாட்டில் அனுமதி இன்றி தனியார் பைக் டாக்சி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பைக் டாக்சி சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்