முன் ஜென்மம் குறித்து பேச்சு: மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் காவல்துறையில் புகார்!

Mahendran

வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (14:37 IST)
மகாவிஷ்ணு முன் ஜென்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அவரது பேச்சை எங்களது மனம் புண்படுத்தியதாகவும் மாற்றுத்திறனாளிகள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீகம் பேசியபோது முன் ஜென்ம பாவ புண்ணியத்தால் தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசியதாக தெரிகிறது.
 
அவருடைய இந்த பேச்சு எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று மகாவிஷ்ணு மீது மாற்றுதிறனாளிகள் புகார் அளித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணுவை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்