ரூ.6 லட்சம் மோசடி: நடிகை மதுவந்தி மீது போலீஸ் புகார்!

வெள்ளி, 24 ஜூன் 2022 (08:00 IST)
ரூபாய் 6 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகளும் நடிகையுமான மதுவந்தி மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான மதுவந்தி தனியார் பள்ளிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகையும் பாஜக நிர்வாகி மதுவந்தியிடம் தனியார் பள்ளியில் சீட் பெறுவதற்காக பணம் கொடுத்ததாகவும் ஆனால் சீட் வாங்கி தரவில்லை என்றும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அடியாட்கள் மூலம் தாக்கியதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்