சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி: கடலூரில் பரபரப்பு..!

வியாழன், 29 ஜூன் 2023 (09:06 IST)
சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு சளி பிரச்சனை இருந்ததை அடுத்து அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் சளி சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த சிறுமிக்கு செவிலியர்கள் கவனக்குறைவாக நாய் கடி ஊசி போட்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் நாய்க்கடி ஊசி போட்ட 12 வயது சிறுமி திடீரென மயக்கம் அடைந்ததால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர்கள் மீது சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
சளி சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி போட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்