நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதிய கார்! 5 பேர் பரிதாப பலி! - ராமேஸ்வரத்தில் சோகம்!

Prasanth Karthick

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (09:37 IST)

ராமேஸ்வரம் அருகே நின்றுக் கொண்டிருந்த பேருந்து மீது கார் மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையோரம் நின்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது படுவேகமாக மோதியது.

 

இதில் கார் சுக்கலாக நொறுங்கிய நிலையில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அதுகுறித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதிகாலையே நடந்த இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்