தமிழகத்தில் இன்று 836 பேருக்கு கொரோனா பாதிப்பு;

திங்கள், 15 மார்ச் 2021 (18:31 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 836 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 860,562 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் மேலும் 317 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12551 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 553 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 842,862ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 64645 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 180,30,760என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்