இந்த ஆண்டு தீபாவளி, அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஆகஸ்ட் 17 முதல் ரயில் டிக்கெட்டுகளை இன்று முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்களான பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் அதிகமானது.