மருத்துவனைக்கு விசிட் அடித்த 6 அடி நீள பாம்பு.. நோயாளிகள் அலறல்

சனி, 3 ஆகஸ்ட் 2019 (17:12 IST)
நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் 6 அடி நீள பாம்பை கண்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் கை கழுவ செவிலியர் ஒருவர் சென்றபோது, அங்கே 6 அடி நீள பாம்பு சுருண்டு கிடந்ததை கண்டு கூச்சலிட்டார். உடனே நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்பின்பு அந்த 6 அடி நீள பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் பாம்பு இருந்த விஷயத்தை அறிந்தவுடன், நோயாளிகள் அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்