இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு – இந்த 6 மாவட்டங்களில்..!

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:03 IST)
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.


தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக. நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்