கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை அடுத்து காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனையும் வாங்கித் தரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறிய நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்து உடனே சண்முகம் மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 62 வயது முதியவர், பேத்தி வயதில் உள்ள நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .