தமிழ்நாட்டில் வாரம்தோறும் 2 நாட்கள் தடுப்பூசி முகாம்கள்!

செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:27 IST)
தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனாவைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்