தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

சனி, 22 ஜனவரி 2022 (08:45 IST)
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. 
 
அதன்படி தமிழ்நாட்டில் இன்று 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 1,600 மையங்களில் முகாம் நடைபெறுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்