144 தடை உத்தரவை மீறியதாக …17,668 பேர் கைது, ஜாமீனில் விடுவிப்பு !

ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:12 IST)
144 தடை உத்தரவை மீறியதாக …17,668 பேர் கைது ஜாமீனில் விடுவிப்பு !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இது அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிக்க வேண்டும் என மக்களுக்குகடுமையான உத்தரவிட்டுள்ளனர். அதை மாநில போலீஸாரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசின் உத்தரவையும் மீறி சில வீட்டை விட்டு வெளியேறி சென்று போலீஸாருகு தொந்தரவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறி  வெளியே சுற்றியதால், தமிழகம் முழுவதும் 17,668  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11,585  வாகங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்