13 வருடம் கழித்து மனைவிக்கு இறந்து பிறந்த குழந்தை...கணவன் விபரீதம் !

சனி, 3 ஆகஸ்ட் 2019 (20:43 IST)
ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள வெங்கமேட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (40). இவர் அங்குள்ள பகுதில் வெல்டிங் வேலை செய்துவந்தார். இவரது மனைவி சாந்தி (35). இந்த தம்பதியினருக்கு மணமாகி சுமார் 13 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று தெரிகிறது.
இதனால் வடிவேலு மிகவும் மனவேதனையுடன் இருந்துள்ளார். பின்னர் தனது அத்தை மகளான உமா மகேஷ்வரியை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளான வடிவேலு வீட்டில் கதவைத் தாழிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்./ 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்