12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதன், 26 ஏப்ரல் 2023 (11:09 IST)
12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதால் அதற்கு பின்பு 12ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் 12 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்