இன்று நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 960 மாணவர்கள் ஆப்சென்ட்..!

வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:29 IST)
சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் அந்த தேர்வின் தமிழ் பாடத்தை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒரு சில விளக்கங்களை அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் இன்றைய முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 960 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த தகவல் பெறும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று இதனை அடுத்து தமிழ் தேர்வை மாணவர்கள் எழுதாதது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்