செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் என்ன நன்மைகள்....?

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்து, 24 மணிநேரம் கழித்துப் பருகுவது, நம் உடலில் உள்ள பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றையில் சமநிலையில் வைக்க உதவுகிறது.

செம்பு பாட்டிலில் தண்ணீர் சேமிக்கும்போது, செம்பு தாதுக்கள் சிறிதளவு தண்ணீரில் சேர்கின்றன. அவை குடிநீரைத் தூய்மையாக, மினரல் வாட்டராக மாற்றுகிறது.
 
செம்பு பாத்திரத்தில் உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தியும் அதிகமாகும். இதைத் தவிர செம்பின் ஏன்டி-பாக்டீரியல் மற்றும் ஏன்டி- வைரல்  தன்மைகள், உடலில் ஏற்பட்டுள்ள புண்களை விரைவாகக் குணமடையச் செய்கிறது. 
 
செம்பு இயற்கையாகவே இளமையைத் தக்க வைக்க உதவுவதுதான். இதில் இடம்பெற்றுள்ள ஏன்டி-ஆக்ஸிடன்ட்கள் முகத்தில் தோல் சுருங்குவதைத் தடுப்பதுடன்,  கருவளையங்கள் உருவாவதையும் அறவே தடுக்கிறது. உடல் மற்றும் சருமத்திற்கு சீரான ரத்த ஓட்டத்தை அளிப்பதுடன், தோலுக்கு புதுப் பொலிவையும்  கொடுக்கிறது. 
 
செம்பு பாத்திரத்தில் சேகரித்த தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால், உடல் எடை குறைந்துவிடும். மேலும் வயிற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பாக்டீரியாக்களை செம்பு அழித்துவிடும்.
 
செம்பு உடலில் சேரும்போது இரத்தசோகை பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் அரியக் கனிமம் தாமிரம். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. 
 
குறிப்பு: செம்பு பாத்திரத்தின் உட்பகுதியை எலுமிச்சை கலந்த தண்ணீர், வினிகர், சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பிறகு 8 மணிநேரம் கழித்து பயன்படுத்தவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்