பழங்களில் உள்ள சத்துக்களும் நோய்களுக்கான தீர்வுகளும்!

மாம்பழம்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிகரிப்பதோடு உடலுக்கு  நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
கொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு எலும்பின் பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த  சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
 
பப்பாளி; பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.  மேலும் நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டாக பப்பாளி  சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம்  உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
 
அன்னாசி: அன்னாசி பழத்தில் வைட்டமின் பி அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
 
மாதுளம்: மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், வறட்டு இருமல்  உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து  உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
 
வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு  வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம்  சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
 
ஆரஞ்சு: ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
 
திராட்சை: திராட்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை  சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு  திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்