செரிமான கோளாறை நீக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி !!

இஞ்சி மஞ்சள் இனத்தை சார்ந்தது, நல்ல மணமுடைய, காரத்தன்மை உடையது . இஞ்சியை காயவைத்து பயன்படுத்துவது தான் சுக்கு. இஞ்சியும் சுக்கும் அன்றாடம் நாம் பயன்படுத்துவதாகும். 

சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும், குடிநீர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பசியை தூண்டும், செரிமான கோளாறை நீக்கும், பித்தம் நீக்கும், மயக்கம், தலை சுற்றல் போக்கும், உடல் வலி, சளி, இருமல் போக்கும்.
 
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் போட்டு ஊறவைத்து தினமும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டுவர (48 நாட்கள்) பித்தம், தலைசுற்றல், உணவு செரியாமை நீங்கும். மேலும் உடல் உறுதி பெறும். ஆயுள் அதிகரிக்கும். முகம் பொலிவு பெறும்.
 
இஞ்சியில் ஆண்டி ஹிஸ்டமைன் என்ற பண்புகள் அதிகம் உள்ளதால் நம் உடலில் காற்றுப்பாதையில் உள்ள சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் சுவாச  பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. சளி மற்றும் தொடைபுண் போன்றவற்றில் இருந்து விரைந்து நிவாரணம் பெறலாம்.
 
இன்றைய சூழலில் புற்று நோய்களில் தாக்கம் ஏராளம். இஞ்சியில் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால் புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது. புரோஸ்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
 
பெருங்குடல் வீக்கம், புற்றுநோய் கட்டிகள் மீது செயல்பட்டு அதன் பாதிப்பை குறைத்து நல்ல பலனைத்தருவதாக ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.
 
இஞ்சியை இடித்து மோரில் கலந்து அதில் துளசி சாறு சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் வீதம் தினமும் ஒரு வாரம் சாப்பிட்டுவர வாய்வுத்தொல்லை நீங்கும்.
 
சீரகம், கருவேப்பிலை, இஞ்சி இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்ட வயிற்றுக்கோளாறு, செரியாமை நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்