முசுமுசுக்கை மூலிகையின் சிறந்த மருத்துவ பயன்கள் !!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (13:31 IST)
சுவாசக்குழல், சுவாசப்பையின் சிறு அறைகளில் ஏற்படும் புண்கள், அழற்சி, ஆகியவ்றை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி சுவசபாதையை சுத்தம் செய்யும் சக்தி உடையது.


இக்கீரையை நன்றாக சுத்தம் செய்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் போல சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் சோர்ந்து போன உடல் பலமாகும். மேலும் மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யும்.

பரட்டைக் கீரை, தூதுவளை கீரை, முசுமுசுக்கை கீரை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.

முசுமுசுக்கை இலையை தைலமாக தயாரித்து அதை வைத்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால் உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போன்றவை நீங்கும். இளநரை மற்றும் வழுக்கை ஏற்படாமல் தடுக்கும்.

முசுமுசுக்கை இலையை சூரணமாக செய்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு, சுவாசநோய் போன்றவை குணமடையும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள். 3 பிடி முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல், மூக்குப் புண், ஆஸ்துமா, மூச்சுதிணறல் போன்றவை குணமாகும், இரத்தமும் சுத்தமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்