அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் கார்டு கட்டாயம்

புதன், 20 ஜூலை 2016 (09:03 IST)
திருப்பதி கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இனிமேல் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது


 

 
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அங்கப்பிரதட்சணம் செய்து சாமியை வழிபடுவார்கள். இனி அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. 
 
இதுகுறித்து கோவில் செய்தி தொடர்பு அதிகாரி கூறியதாவது:-
 
அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் இனிமேல் கட்டாயம் ஆதார் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பக்தர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்