ரயிலுக்கடியில் சிக்கி கொண்ட பெண்:பதைபதைக்கவைக்கும் சம்பவம்

செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (15:56 IST)
ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கி கொண்ட பெண், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயில் நடைமேடையிலிருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. உடனே அப்பெண் ரயில் தண்டவாளத்தில் உடலை குறுக்கியபடி படுத்துகொண்டார்.

ரயில் சென்ற சிறுது நேரத்தில் அப்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பெரும் பதைபதைப்போடு இருந்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்