பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? யஷ்வந்த் சின்ஹா கேள்வி

வெள்ளி, 24 ஜூன் 2022 (08:06 IST)
பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? யஷ்வந்த் சின்ஹா கேள்வி
பழங்குடியினர் நலனுக்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு என்ன செய்து உள்ளார் என எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். 
 
திரவுபதி முர்மு ஒரு பழங்குடி இனத்தவர் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் பழங்குடியினருக்கான அவர் என்ன செய்து உள்ளார் என்ற கேள்வியை யஷ்வந்த் கேள்வி எழுப்பி உள்ளார்
 
திரவுபதி ஒரு ஆளுனராக இருந்துள்ளார் அவ்வளவுதான் என்றும், ஆனால் நான் நிதி அமைச்சராக இருக்கும்போது தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுக்களை பாருங்கள்.  பழங்குடியினர் நலனுக்காக அதிகமாக நான்தான் செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் 
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக இன்று திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்