ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.! சோனியா காந்தி வலியுறுத்தல்..!!

Senthil Velan

செவ்வாய், 7 மே 2024 (17:17 IST)
அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள் என்று வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
 
காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில் பேசிய அவர், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதற்கு பாஜகவும், பிரதமர் முடியுமே காரணம் என குற்றம் சாட்டியுள்ள சோனியா காந்தி,  எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது என்றார். அனைவரின் முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் காங்கிரஸ் கட்சியும் நானும் எப்போதும் போராடி வருகிறோம் என்று சோனியா குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: விவாகரத்து வழக்குகளில் விசாரணை இழுத்துடிப்பு..! உரிய விதிகளை வகுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை..!
 
அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்