நிர்மலா சீதாராமனால் மக்கள் இறக்கிறார்கள்: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு!

ஞாயிறு, 5 ஜூலை 2020 (15:03 IST)
இந்திய பொருளாதாரத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிதைத்து விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. இருகட்சி தலைவர்களும் அடிக்கடி சர்ச்சைகுரியவாறு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் நடந்த காணொளி கூட்டம் ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கு வங்கம் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றே பேசியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கல்யான் பானர்ஜி “விஷ பாம்பு கடித்து உயிரிழப்பது போல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்கள் உயிரிழக்கிறார்கள். அவர் ஒரு மோசமான நிதியமைச்சர். அவரால் இந்தியா பொருளாதாரம் சிதைந்து விட்டது. இதற்காக அவர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்