உலகில் நீளமான கடிதம் இதுதான் ! உலக சாதனை அங்கீகாரம்!

புதன், 29 ஜூன் 2022 (18:30 IST)
கேரள மாநிலத்தில் அண்ணனுக்கு 434 மீட்டர் நீளத்தில் மிக நீளமான கடித்தம்  ஒன்றை எழுதியுள்ளார். இது சாதனையாக அங்கீகரிக்கப்படுகிறது.

உலகில் எத்தனை தொழில் நுட்பம் வளர்ந்தாலும் கடிதத்திற்கு எப்போதும் தனி மதிப்புண்டு. இந்த நிலையில், இந்தக் கடிதம் எழுதுவதில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தங்கை கிருஷ்ண பிரியா, தன் அண்ணன் மீது அளவுக் கடந்த பாசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், பிறந்த நாள் முதற்கொண்டு தற்போது வரையில்,  தன் அண்ணன் மீதான பாசத்தை சுமார் 12 மணி நேரத்தில் சுமார் 434 மீட்டர் நீளத்திற்கு நீளமான கடிதமாக எழுதியுள்ளார்

இந்தக் கடிதம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்