இறந்த தந்தையை மீட்க குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்!!

திங்கள், 14 நவம்பர் 2022 (19:31 IST)
இறந்த தன் தந்தையை மீட்க வேண்டி ஒரு பெண் 2 மாதக் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனின் தென்கிழக்குப் பகுதியான கைலாஹின் வசித்து வரும் ஒரு பெண்ணின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.

ALSO READ: பிரிட்ஜில் வைக்கப்பட்ட மனித மாமிசம்: நரபலி வழக்கில் பகீர்!
 
தந்தை மீது கொண்ட பாசத்தால், அவரை மீண்டும் உயிருடன் மீட்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில், ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என்று ஒருவர் கூறியதை நம்பி, அப்பெண்,  பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஒன்றைக் கடத்தியுள்ளார்,

அப்பெண் தன் திட்டத்தை நிறைவேற்றும் முன்னரெ போலீசார், குழந்தையை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,அப்பெண் தன்  நரபலிக்கு முயன்றதை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்