குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரண்டு சகோதரிகள் பள்ளிக்கு சென்றறு வந்துள்ளனர். இவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் பள்ளிக்குச் சென்றபோது, ஒரு வாலிபர் அவரை பின் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, அந்த மாணவி தன் மூத்த சகோதரியிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், விஜய் சர்காதே என்ற அந்த வாலிபருக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டனர்.
அதன்படி, ஒரு நாள் இளைய சகோதரி சைக்கிளில் செல்லும்போது, சர்கர்தே அவரது கையைப் பிடித்து, பரிசு கொடுத்து, முத்தம் கொடுக்க முயற்சித்து,பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றுள்ளார்.