பெட்ரோல் விலை உயர்வு...மாற்றி யோசித்த மக்கள் !

திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:15 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. வரலாறு காணாத வகையில்  பெட்ரோல்- டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் –ரூ.100 ஐ தாண்டிவிட்டது.    நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல்  விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே மக்கள் மோட்டார் வாகனங்களுக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து  AVON என்ற சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாவது: பெட்ரோல் விலை உயர்வு கொரொனா காரணமாக சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்