கைதியின் வயிற்றில் கவரில் மடித்து வைத்த கடிதம்... மருத்துவர்கள் அதிர்ச்சி

திங்கள், 19 அக்டோபர் 2020 (22:36 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் கடிதத்தில் தற்கொலை செய்யும் முன் கைதியை சிறைக்காவலர்கள் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமாக அந்தச் சிறையில் உள்ள 5 முக்கிய அதிகாரிகளின் பெயரும் இதில் தெரிவிகப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்  வெளியுலகிற்குத் தெரிய வேண்டுமென்பதற்காகவே அவர் ஒரு கவரில் சுற்றப்பட்ட கடிதத்தை விழுங்கியுள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்