உரிமையாளரை காப்பாற்ற 48 மணி நேரம் குரைத்து உதவி கோரிய நாய்!

Sinoj

வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:38 IST)
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தனது உரிமையாளரை காப்பாற்ற வேண்டி தொடர்ந்து  48 மணி நேரம் குரைத்து உதவி கோரியுள்ளது வளர்ப்பு நாய்.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில், மலையேறச் சென்ற அபிநந்தன், பர்னிதா ஆகியோர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அபிநந்தனின் சகோதரர் அளித்த புகாரில், மீட்புக்குழுவினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மீட்புக்குழுவினரை பார்த்த நாய், அவர்களை பார்த்துக் குரைத்து உதவிக்கு அழைத்துள்ளது.

அதாவது, அபிநந்தன், பர்னிதா மலையேறும்போது, பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்துள்ளனர். எனவே உரிமையாளர்களைக் காப்பாற்றும்படி  48 மணி நேரமாய் அவர்கள் வளர்ந்து வந்த நாய் குரைத்து உதவி கோரியுள்ளது.

ஆனால், கடும் குளிர் காரணமாக இருவரும் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்