வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ..கயிறு கட்டி மீட்ட மக்கள்!

வியாழன், 7 ஜூலை 2022 (23:59 IST)
குஜrராத் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை மக்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில்,குஜராத்  மா நிலத்தில் உள்ள சவுராஷ்டிர பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜாம் நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இடையே ஒரு பேருந்து சென்றபோது, விபத்தில் சிக்கியது. அதில் இருந்தவர்களை மீட்பதற்காக மக்கள் கயிறு கட்டி, அப்பெருந்தை மீட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்