இந்தியாவிடம் ரூ.4000 கோடிக்கு உதிரி பாகங்கள் வாங்குகிறாரா டெஸ்லா?

வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:42 IST)
உலகின் முன்னணி கார் தயாரிப்பாளரான டெஸ்லா இந்தியாவிடம் ரூபாய் 4000 கோடி கார் உதிரி பாகங்கள் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவிடமிருந்து வாகன உதிரி பாகங்களை வாங்கினால் டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை தரப்படும் என மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
 
 இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேவைக்கு உண்டான 10% வாகன உதிரி பாகங்களை அதாவது சுமார் 4000 கோடி மதிப்பிலான உதிரிபாகங்களை இந்தியாவிடமிருந்து வாங்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்தியாவிடமிருந்து டெஸ்லா வாங்கும் வாகன உதிரிப்பாகங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை தருவதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்