அரசியல்வாதி ஆளுநராகலாம்… ஆனால் ஆளுநர்தான் – தமிழிசை கருத்து!

சனி, 24 ஜூலை 2021 (10:43 IST)
தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் பாஜகவின் பதவிகளை ராஜினாமா செய்தார். இப்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் ’நான் இப்போது 4 நாட்கள் புதுச்சேரியிலும், 3 நாட்கள் தெலங்கானாவிலும் என இருந்து சமமாக செலவிடுகிறேன். அரசியல் வாதி ஆளுநராகலாம். ஆனால் ஆளுநர்தான் அரசியல் செய்யக்கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்