விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிரிழந்த விமானி! தமிழகத்தை சேர்ந்தவரா?

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:53 IST)
விமானம் கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த விமானத்தை இயக்க இருந்த விமானி உயிரிழந்ததாகவும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன,
 
 நாக்பூரில் இருந்து புனேவுக்கு செல்ல இருந்த விமானத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானி மனோஜ் சுப்பிரமணியம் என்பவர் இயக்க விருந்தார். இந்த நிலையில் விமானம் கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடனே உயிரிழந்தார். 
 
விமான நிலைய நுழைவு வாயிலில் அவர் மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 
 
விமானம் கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் உயிரிழந்த தமிழக மாநிலம் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்