சுஷ்மா சுவராஜ்-கு மோடி ஆறுதல்

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (02:22 IST)
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

 
டெல்லி ஏம்ய்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுவாச பிரச்னை காரணமாக கடந்த 24 ஆம் தேதி டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்