கரும்பு விளைவிப்பதால் தான் சர்க்கரை நோய் வருகிறது. முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு

புதன், 12 செப்டம்பர் 2018 (15:59 IST)
தமிழக அமைச்சர்களில் சிலர் தெர்மோகோல் உள்பட பல வித்தியாசமான ஐடியா கொடுத்ததால் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய கண்டுபிடிப்பை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளே காரணம் என்றும், அதனால் விவசாயிகள் கரும்பை பயிரிடாமல் மாற்றுப்பயிர்களை விளைவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நரேந்திர மோடிக்கு பின்னர் பிரதமர் வேட்பாளராக யோகி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவருடைய இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்று முழுவதும் எந்த மேட்டரும் கிடைக்காமல் காய்ந்து போயிருந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம மேட்டர் கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்