தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தினமும் திருமண நிகழ்வுகளுக்காக பெரிய விளக்குகளை தூக்கிச் செல்லும் வேலை செய்து, தினமும் இரவு நள்ளிரவில் வீடு திரும்புவார். அப்போதும், உறங்கும் முன் இரண்டு மணி நேரமாவது படிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
இவரது தாயார் புஷ்பா கூறுகையில், “பகல் முழுக்க வேலை செய்த பிறகும், வீடு வந்ததும் என் மகன் புத்தகத்தைத் தான் முதலில் எடுப்பான்,” என்று பெருமையுடன் சொல்கிறார்.