உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிதந்தராபாத் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு, இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பச் சொன்ன நிலையில், கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் கேட்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், “மேனேஜர் சொன்னால் தருகிறேன்” என்று கூறினார். இதையடுத்து, இருவரும் மேனேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்புமாறு கேட்டனர். ஆனால் மேனேஜர் அதற்கும் மறுத்துவிட்டார்.