மதுபோதையில் இருக்கும் நான்கு இளைஞர்கள், ஒரு 16 வயது சிறுவனின் கையைகட்டி, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
அந்த வீடியோ வெளியானதும், இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். விசாரணையில், அந்த சிறுவன் திருடியதாகவும், அதனால் அவனுக்கு அந்த தண்டனைய கொடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.