இரண்டாவது நாள் சரிவுக்கு பின் சென்செக்ஸ் இன்று ஏற்றம்!

புதன், 20 ஏப்ரல் 2022 (10:07 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்தும் சரிந்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 56972 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 120 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்