மீண்டும் படுவீழ்ச்சியை நோக்கி பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

வெள்ளி, 10 ஜூன் 2022 (09:47 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் மூன்று நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 மும்பை பங்குச் சந்தையின் 54,600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 200 புள்ளிகள் சரிந்து 16275 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்