ஏற்ற இறக்கமின்றி தொடரும் பங்குச்சந்தை; இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:10 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருக்கும் நிலையில் அவ்வப்போது சிறிய சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் மற்றும் உயர்ந்த 59343 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7 புள்ளிகள் மற்றும் தொடர்ந்து 17 ஆயிரத்து 666 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை வர்த்தகம் இன்று சீராகவே இருக்கும் என்றும் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்