ஆரம்பத்தில் சரிந்தாலும் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை!

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (09:34 IST)
கடந்த இரண்டு வாரங்களாக பங்கு சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்கு சந்தை இறக்கத்தில் தொடங்கினாலும் அதன்பின் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்செக்ஸ்  வெறும் 10 புள்ளிகள் மட்டுமே சரிந்து 58 ஆயிரத்து 374 என்ற புள்ளியில் வர்த்தகமானது. ஆனால் தற்போது சென்செக்ஸ் 45 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
 
 தேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி முதலில் 7 புள்ளிகள் மட்டும் குறைந்து 17 ஆயிரத்து 390 என்ற நிலையில் வர்த்தகம் ஆனாலும் தற்போது 10 புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்