முகம் வீங்கி, கண்களில் ரத்தத்துடன் போலீஸுடம் புகார் செய்த சீரியல் நடிகை ?

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:38 IST)
மும்பையில் பிரபல சீரியல் நடிகையான நளினி, தன்னை பிரித்தி மற்றும் அவரது தாய் தாக்கிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
மும்மையில் வசித்து வருபவர் பிரபல நடிகை நளினி நேகி.  இவர் தனத் தோழியான பிரீத்து என்பவருடன் தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் பிரீத்தி அங்கிருந்து சென்றுவிட்டார். 
 
பின்னர் சில நாள்களுக்கு அடுத்து,  பிரீத்தி அவரது அறைக்குச் சென்று  மேலும் சில நாட்கள் தங்குவதற்கு அனுமதி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நளினியும் சம்மதித்துள்ளார். அப்போது பிரீத்தி தனது தாயுடன் உள்ளே நுழைந்து நளினியை அடித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நடிகை நளினி தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் மும்பை போலீஸில் சென்று புகார் அளித்துள்ளார். இந்த் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்