இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் “காந்தி, நேரு போல வீர சாவர்க்கரும் நாட்டின் விடுதலைக்காக கடுமையாக உழைத்தவர். பல இன்னல்களை அனுபவித்தவர். ஆனால் பலர் அவருக்கு பாரத ரத்னா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை இரண்டு நாட்களாவது அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சாவர்க்கர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவர்களுக்கு புரியும்” என கூறியுள்ளார்.